Petrol Bunk
Petrol Bunk pt desk
தமிழ்நாடு

"காசு இல்ல.. பெட்ரோல் போடு" - போலீசார் முன்னிலையிலேயே பெட்ரோல் பங்கை துவம்சம் செய்த கும்பல்!

webteam

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிருங்காக்கோட்டையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கிற்கு நேற்று மதியம் வந்த இருவர், காசு தராமல் பெட்ரோல் போடும்படி கூறியுள்ளனர் இதையடுத்து ஓனர் கூறாமல் பெட்ரோல் போட முடியாது என்றும் ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து உடனடியாக பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அவரும் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

Petrol Bunk attack

இந்நிலையில், பெட்ரோல் பங்கிற்கு போலீசார் ஒருவர் பாதுகாப்புக்காக இருந்துள்ளார். இதையடுத்து நேற்றிரவு அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த 3 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கி துவம்சம் செய்து விட்டு தப்பிச் சென்றனர். போலீசார் ஒருவர் பாதுகாப்புக்கு இருந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ள அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் உள்ள முக்கிய பெட்ரோல் பங்கை இளைஞர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.