தமிழ்நாடு

நண்பர்கள் வாய்த்தகராறு - கொலையில் முடிந்த விபரீதம்

நண்பர்கள் வாய்த்தகராறு - கொலையில் முடிந்த விபரீதம்

PT

நாகர்கோவிலைச் சேர்ந்த கார் ஓட்டுனர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த கார் ஓட்டுனர் வினோத் (வயது 23). நேற்று இரவு இவருக்கும் இவரது நண்பர் ஜெனிஸ்டன் என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே வாய்தகராறு முற்றிய நிலையில், இருவரும் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து இதில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் வினோத் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். தகவலறிந்த ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்