தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது

webteam

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டார்

முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி 2018ம் ஆண்டு, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அதிமுக அறிவித்தது.

இந்நிலையில் கே.சி.பழனிசாமி இன்று கைது செய்யப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தான் தொடர்ந்து கட்சியில் நீடிப்பதாகக் கூறி ஏமாற்றியதாகவும், அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாகவும் பழனிசாமி மீது புகார் கூறப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் அவரது வீட்டில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கே.சி.பழனிசாமியை மேல்
விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்துக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர்