பொன்முடி - ஸ்டாலின்
பொன்முடி - ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு!

PT WEB

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறையும், அவருக்கும் அவருடைய மனைவிக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தான் வகித்து வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதிவியையும் பொன்முடி இழந்துள்ளார்.

இந்த தீர்ப்பு விவரங்கள் நேற்று வந்தது. இந்நிலையில் தண்டனை தீர்ப்பிற்கு பிறகு முதலமைச்சர் முக ஸ்டாலினை அவருடைய இல்லத்திற்கே சென்று இன்று சந்தித்து பேசியுள்ளார் பொன்முடி.