ஜெயக்குமார்
ஜெயக்குமார் கோப்பு படம்
தமிழ்நாடு

”அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்கவும், அசைக்கவும் முடியாது” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

PT WEB

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், விவி ரமணா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான் ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க அனுமதி வழங்கக் கோரி ஆளுநருக்கு தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்திற்கு இன்று ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. சில முன்னாள் அமைச்சர்களின் வழக்குகள் சிபிஐ வசம் உள்ளது என்றும் சில வழக்குகளில் தமிழக அரசிடம் இருந்து விவரங்கள் தேவைப்படுகிறது என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.