செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் அமைந்துள்ள நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமான அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நாட்டைச் சேர்ந்த 30 பேர் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என தமிழில் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தனர், உலக அமைதி வேண்டியும், தமிழகத்தில் உள்ள கோயில் கோயிலாகச் சென்று வழிபட்டு வருகின்றனர்,
இந்நிலையில், சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலமான அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் மனமுருகி வழிபாடு செய்தனர். அப்போது கோயிலுக்கு வந்த உள்ளுார் பக்தர்கள், வெளிநாட்டவர்கள் ஓம் நமச்சிவாய என தமிழ் மொழியில் உச்சரித்து பக்தி பரவசத்தோடு வழிபாடு செய்வதை வியந்து பார்த்தனர்.