தமிழ்நாடு

குற்றாலத்தில் வெள்ளம்: அருவிகளில் குளிக்க தடை

குற்றாலத்தில் வெள்ளம்: அருவிகளில் குளிக்க தடை

webteam

நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள குற்றால அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

 மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இன்று அதிகாலை குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.  குளிக்கத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.