வளசரவாக்கம் மருத்துவமனை
வளசரவாக்கம் மருத்துவமனை புதியதலைமுறை
தமிழ்நாடு

வளசரவாக்கம்: அரசு மருத்துவமனையை சூழ்ந்துள்ள வெள்ளம்.. கர்ப்பிணிகள் கடும் அவதி!

யுவபுருஷ்

மிக்ஜாம் புயல் மழையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் மழைநீர் வடிந்தாலும், இன்னமும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இருக்கிறது. அந்த வகையில், வளசரவாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், இங்கு இருக்கும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அப்பகுதியில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு வந்து செல்லும் நிலையில், வெள்ள நீரால் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாலும், இந்த மருத்துவமனையை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கர்ப்பிணிகள் மட்டுமல்லாது பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.