தமிழ்நாடு

சென்னையில் சீரானது விமான சேவை

Sinekadhara

சென்னையில் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை சீரானது.

கனமழை காரணமாக சென்னைக்கு வருகை தரும் விமானங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியதையொட்டி சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட்டை விலக்கிக்கொள்வதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் மழை குறைந்ததால் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதாக விமான சேவை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.