தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தி முழுமதுவிலக்கை எட்டும் நோக்கில் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அதிமுகவின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் கடந்த ஆண்டு மே மாதத்தில் பதவியேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். இந்தநிலையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.