தமிழ்நாடு

6 நாட்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவர்கள்

webteam

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு இன்று கடலுக்குச்சென்றனர். 

மீனவர் சேமிப்பு நிவாரண நிதி தொகை ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த 7ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால், 10ஆயிரத்திற்கும் அதிகமான மீன்பிடி தொழிலாளர்களும், 30ஆயிரத்திற்கும் அதிகமான சார்பு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். 

அதனையடுத்து, மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், மீனவர்கள் இன்று கடலுக்கு புறப்பட்டனர்.