Ilavarasan
Ilavarasan pt desk
தமிழ்நாடு

வந்தவாசி: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்த விபத்தில் தந்தை மகன் உயிரிழப்பு

webteam

மேல்மருவத்தூரை அடுத்துள்ள எலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன். இவர் தனது மனைவி மனைவி மீனாட்சி, மகள் பிரசாந்தினி, மகன் பிரவீன் ஆகியோருடன் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து குடும்பத்துடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

car accident

அப்போது இளவரசன் காரை ஓட்டிவந்த நிலையில், வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இளவரசனின் மகன் பிரவீன் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இளவரசன் மற்றும் அவரது மகள் பிரசாந்தினி ஆகியோர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக இளவரசனை கொண்டு செல்லும் வழியில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மகள் பிரசாந்தினி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் 3 வயது மகன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.