தமிழ்நாடு

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: தரைமட்டமானது அறை!

webteam

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை தரைமட்டமாகியுள்ளது. தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. 

சிவகாசி அருகிலுள்ள பேர்நாயக்கன்பட்டியில் கிரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், மூலப்பொருட்கள் வைக்கப்ப‌ட்டிருந்த அறையில் இன்று அதிகாலை திடீரென பயங்கர வெடி‌விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அருகிலுள்ள்‌ பட்டாசு தயாரிப்பு அறைகளுக்கு தீ பரவாத வண்ணம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
தரைச்சக்கர பட்டாசு தயாரித்துவிட்டு, மீதம் வைத்துவிட்டுச் சென்ற கலவையில் வேதிமாற்றம் ஏற்பட்டு வெடிவிபத்து நிகழ்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.