தமிழகத்தில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக பெருவாரியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக பெருவாரியான கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டைம்ஸ் நவ்- வி.எம்.ஆர் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, திமுக கூட்டணி 29 இடங்களிலும், அதிமுக கூட்டணி கூட்டணி 9 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் எக்ஸ்- நேத்தா வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, திமுக 17 இடங்களிலும், அதிமுக- 8 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், மற்றவை 9 இடங்களை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சி.என்.என். நியூஸ் 18 வெளியிடுள்ள கருத்துக் கணிப்பின்படி, திமுக கூட்டணி 22- 24 இடங்களிலும், அதிமுக கூட்டணி 14-16 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியா டிவியின் கருத்துக் கணிப்புபடி, திமுக 20 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் 24- டுடேஸ் சாணக்யா வெளியிட்டுள்ள கணிப்பின்படி, திமுக கூட்டணி 31 இடங்களிலும், அதிமுக கூட்டணி 6 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல திமுக கூட்டணி 34 முதல் 38 இடங்களிலும், அதிமுக கூட்டணி 0 முதல் 4 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
என்டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி அதிமுக கூட்டணி 11 இடங்களிலும், திமுக கூட்டணி 26 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அன்றை தினமே, யார் வெற்றி தோல்வி என்பது முடிவாக தெரியவரும்.