சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1500 கன அடியில் இருந்து 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 35 அடி நீர்மட்டத்தில் 34 அடியை தண்ணீர் எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி கொற்றலை ஆற்றில் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. ஆந்திராவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று காலை நிலவரப்படி உபரிநீர் வெளியேற்றுவது 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது, நீர்வரத்து குறைந்ததால் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.