தமிழ்நாடு

மாநில உளவுத்துறை ஐ.ஜி ஆக ஈஸ்வரமூர்த்தி நியமனம்

webteam

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்து வரும் ஈஸ்வரமூர்த்தியை மாநில உளவுத்துறை ஐ.ஜியாக தமிழக அரசு நியமித்துள்ளது.

தமிழகத்தின் மாநில உளவுத்துறை ஐ.ஜியாக சத்தியமூர்த்தி இருந்து வந்தார். இவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து மாநில உளவுத்துறை ஐ.ஜி பதிவுக்கு உரிய நபரைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்து வரும் ஈஸ்வரமூர்த்தியை மாநில உளவுத்துறை ஐ.ஜியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.