EPS
EPS புதிய தலைமுறை
தமிழ்நாடு

“கனமழை பாதிப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு..!” - EPS விமர்சனம்

PT WEB

சென்னை பெருவெள்ளத்திற்கு மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், ”கனமழை பெய்து 5 நாட்களாகியும் சில இடங்களில் நீர் வடியவில்லை. ஆனால் தண்ணீர் தேங்கவில்லை என அமைச்சர்கள் பொய்க்கூறி வருகின்றனர். 2,400 கி.மீ-க்கு வடிகால் அமைக்கும் திட்டத்தை கொண்டுவந்தது அதிமுக. மழைநீர் வடிகால் பணிகளை தற்போதைய அரசு தாமதப்படுத்தியதுதான் பாதிப்பு அதிகமானதற்கு காரணம். மாநகராட்சி முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை” என விமர்சித்துள்ளார்.