தமிழ்நாடு

"என்னப்பா விசேஷம்.. கல்யாணம்ப்பா.. சரக்கு உண்டா".. வைரலாகும் திருமண அழைப்பிதழ்!

kaleelrahman

கள்ளக்குறிச்சி அருகே உள்ள வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனது திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சிட்டு வழங்கி வருகிறார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசனுக்கும், நவீனா என்வருக்கும் வருகிற 29.08.2022 அன்று திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், அவரது திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சிட்டு வழங்கி வருகிறார்.

அதில் என்னப்பா விசேஷம் கல்யாணம்ப்பா... யாருப்பா மாப்பிள்ளை நம்ம ஹீரோ கண்ணதாசன். யாருப்பா பொண்ணு நம்ம ஹீரோயினி நவீனா எப்போப்பா கல்யாணம் எங்கப்பா கல்யாணம் என கேள்விக்கு பதில் சொல்வது போல் நகைச்சுவையாக அழைப்பிதழ் அச்சிட்டு வழங்கி வருகிறார். இந்த அழைப்பிதல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த அழைப்பிதழில் மொய் குறித்தும், சரக்கு பார்ட்டி குறித்து அவர் குறிப்பிட்டுள்ள வசனங்கள் தெறியாக உள்ளது. 

"கிப்ட், ஏதாவது வாங்கிட்டு வரனும்மா-பா.. நீங்க அன்போடு நகைய கொடுத்தாலும் சரி, பாசத்தோடு பணத்த கொடுத்தாலும் சரி எதை கொடுத்தாலும் வாங்கிக்கேனு ஏ மனசு சொல்லுது” என்றதோடு, ‘நீங்க வந்தா மட்டும் போதும்.. நீங்க வந்தா மட்டும் போதும்ம்ம்’ என அடைப்பிற்கு குறிப்பிட்டுள்ளார்.

எல்லாம் சரி பாஸ் சரக்கு உண்டா என்ற கேள்விக்கு அய்யோ சரக்கா!!! குடி குடியை கெடுக்கும் என்றதோடு கல்யாண வீட்டில் பஞ்சாயத்தை உண்டாக்கும் என்றும் நாசுக்காக குறிப்பிட்டுள்ளார்.