தமிழ்நாடு

விருதுநகரில் ரூ.1 கோடி மதிப்பிலான யானைத் தந்தங்கள் பறிமுதல்

Rasus

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில் யானை தந்தங்கள் கடத்தி விற்பனைச் செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, மத்திய வன உயிரின குற்றத் தடுப்புப் பிரிவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாத்தூரில் எஸ்.என்.ஆர் நாயுடு காலனி பகுதியில் அசோக் என்பவரின் எலக்ட்ரானிக்ஸ் கடையை சோதனைசெய்தனர். கடையில், ஏழரை கிலோ எடையுள்ள இரண்டு தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து அசோக் உள்ளிட்ட 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் உள்பட இரண்டு பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.