கள்ளக்குறிச்சி அடுத்த மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் தற்காலிக மின்மோட்டார் அமைக்க சென்ற மூன்று தற்காலிக மின்வாரிய பணியாளர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இருவர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர்.