தமிழ்நாடு

காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்

Rasus

கல்விகண் திறந்த மேதை என்று போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜரின் 115-ஆவது பிறந்தநாள் விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் திரண்ட தமிழ் ‌மாநில காங்கிரஸ் கட்சி‌யினர், பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தங்களை வழங்கினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு அரசியல் க‌ட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், காமராஜரின் நினைவைப் போற்றும் விதமாக அவரது உரு‌வப் படத்திற்கு மாணவர்கள் மரியாதை செலுத்தினர். பின்பு மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் பயிற்சியை காவல்துறை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் சாய‌ல்குடியில் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.