தமிழ்நாடு

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது ? : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

webteam

தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்பதை வரும் 10ஆம் தேதி முதலமைச்சர் அறிவிப்பார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி திறப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்பதை வரும் 10ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.