அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் கூட தோல்வியடைந்த அரசாக திமுக அரசு திகழ்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 12 ஆயிரத்து 753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என வரும் செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றதுறைகளைக் காட்டிலும் நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக கூறியுள்ளார். உடனடியாக ரேஷன் கடைகளுக்கு கோதுமை செல்வதை ஸ்டாலின் அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், ”தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன.
இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டது.
திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும்.
நெல் கொள்முதல் முதல், கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட Total Failure ஆக இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்..