சென்னையில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது எனவும் அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால் தான் குற்றவாளிகளுக்கு அச்சம் வரும் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
‘SIR’ போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால்தான் தமிழ்நாட்டில் பல சார்கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கை தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.