தமிழ்நாடு

எந்நேரமும் தமிழ்! தமிழ்! என வாழ்ந்த பேரறிஞர் அண்ணா: முதல்வர், துணை முதல்வர் ட்வீட்

எந்நேரமும் தமிழ்! தமிழ்! என வாழ்ந்த பேரறிஞர் அண்ணா: முதல்வர், துணை முதல்வர் ட்வீட்

webteam

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 52-ஆவது நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்களை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழை சுவாசித்தவர்; தமிழர்களை நேசித்தவர்; ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.