தமிழ்நாடு

முழு ஊரடங்கு எதிரொலி: கடலூரில் கோயில் வாசலில் நடைபெற்ற திருமணங்கள்

kaleelrahman

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொள்ள ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சுமார் 20 ஜோடிகள், கோயில் வாசலிலும், கோயில் முன்புறமுள்ள சாலையிலும் திருமணம் செய்து கொண்டனர்.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ள நிலையில், கோயிலுக்குள் அனுமதி இல்லை என்பதால், அனைத்து விதமான ஐதீக நிகழ்வுகளையும் சாலையிலே நடத்தி, திருமணம் செய்துகொண்டு தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர்.