தமிழ்நாடு

தொடர்மழை எதிரொலி: வெள்ள நீரில் மிதக்கும் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயம்

kaleelrahman

தொடர் கனமழை காரணமாக வேலூர் கோட்டையில் அமைந்துள்ள கோட்டை ஜலக்ணடெஸ்வரர் ஆலயம் வெள்ள நீரில் மிதக்கிறது.

வேலூர் மாநகரின் மத்தியில் 136 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை. இதனுள் உள்ள கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. வேலூர் கோட்டையை சுற்றியுள்ள சுமார் 16 அடி ஆழம் கொண்ட கோட்டை அகழியில் கனமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்ததால் கோட்டைக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது.