தமிழ்நாடு

கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!

jagadeesh

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் மேற்கொள்ள இருந்த படகு பயணத்துக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

கடலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதியில்லை என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் கடலில் ராகுல் காந்தி படகில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.