‘இ-பாஸ் முறையை எளிமையாக்க கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது’ என மதுரையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்க மதுரைக்கு சென்றுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பின் பத்திரிகையாளர்களை சந்திப்பின் போது அவர் தெரிவித்தது “இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தான். கொரோனா தடுப்புக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவு தமிழிககத்தில் இருப்பு உள்ளன. இ பாஸ் முறையை எளிமையாக்க கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.