தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: சுற்றுலா ஊர்களுக்கு அவசர காரணத்திற்கு இ-பாஸ்

Sinekadhara

சுற்றுலா ஊர்களுக்கு அவசர காரணத்திற்கு மட்டும் இ-பாஸ் பெற்று பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாதிப்பு அதிகமுள்ள மேற்கு மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் இ-பதிவு முறை மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கடந்த ஆண்டை போன்று இ-பாஸ் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது சுற்றுலா பகுதிகளான நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலத்திற்கு அவசர காரணங்களுக்காக மாவட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் பெற்று பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.