தமிழ்நாடு

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் - ஆய்வு மையம்

webteam

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் எ‌‌னவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.