தமிழ்நாடு

வாகன ஓட்டிக்கும் போக்குவரத்து காவலருக்கும் தள்ளுமுள்ளு : வீடியோ

webteam

திருப்பூரில் குடிபோதையில் இருந்த இளைஞருக்கும் போக்குவரத்து காவலருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த முரளி என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவருடைய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அப்போது தகராறில் ஈடுபட்ட முரளிக்கும் போக்குவரத்து காவலர் பொன்னாங்கண்ணி என்பவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதில் முரளியின் தலையில் காயம் ஏற்பட்டதுடன், காவலரின் சட்டையும் கிழிந்தது. இதையடுத்து போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சிலர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். காயமடைந்த காவலர் பொன்னாங்கண்ணி மற்றும் முரளி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.