தமிழ்நாடு

"இடைதரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்" - டின்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

webteam

சமூக வலைதளங்களில் பரவும் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தேர்வு முடிவுகளை நம்ப வேண்டாம். அதை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கடந்த 2- 7- 2022 அன்று நடத்தப்பட்ட ஒருகிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இவ்வாறு பரப்பப்படும் போலியான் தகவல்களை நம்பி இடைதரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள இங்கே இணைக்கப்பட்டுள்ளது.