கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் விலைப்பட்டியலை வைக்க வேண்டும் என கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணக் கொள்ளை நடப்பதாக வந்த புகாரை அடுத்து கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் விலைப்பட்டியலை வைக்க வேண்டும் எனவும், தங்கும் விடுதியில் காலை 10 மணிக்கு செக்-அவுட் முறை என்பது விதிகளுக்கு புறம்பானது என்றும் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.