மூளை சாவு அடைந்த பெண்
மூளை சாவு அடைந்த பெண் PT
தமிழ்நாடு

மதுரை: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்.. அரசு சார்பில் இறுதி மரியாதை

Jayashree A

மதுரை மாவட்டம் மேலூரில் மூளை சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அரிடா பட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழ் செல்வி என்பவர் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தார். இதனை அடுத்து அவர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் சம்மதம் தந்தனர்.