தமிழ்நாடு

சசிகலாவை சாக்கடை நீர் என குறிப்பிட்டாரா குருமூர்த்தி? - துக்ளக் விழாவில் பேசியது என்ன?

EllusamyKarthik

சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா கலந்து கொண்டு பேசவுள்ளார்.

இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி, “வீடு பற்றி எரிகிறது கங்கை ஜலத்திற்கு நாம் காத்துக்கொண்டிருக்க முடியாது, நாம் சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம் என்று அருண் செளரி கூறியிருந்தார்.

அவர் சொன்னது போல், திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் கங்கை ஜலத்துக்கு காத்திருக்காமல் எல்லா ஜலத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது” என்றார்.