சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கண்டித்து திமுக சார்பில் வரும் 22ல் மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திமுகவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் வரும் 22ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த என்று முடிவு செய்யப்பட்டது.