தமிழ்நாடு

பொதுமக்களுடன் செல்ஃபி : வேலூரில் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின் 

webteam

வேலூர் உழவர் சந்தை பகுதியில் நடைபயணமாக சென்று திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நடைபயிற்சியின்போது பொதுமக்கள், வியாபாரிகளுடன் ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக்கொண்டார். 

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். 

ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் கதிர் ஆனந்தை ஆதரித்தும் திமுக பிரமுகர்கள் வாக்குச் சேகரித்து வருகின்றனர். 

இதைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமியும் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினும் இன்று பரப்புரையை தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வேலூர் உழவர் சந்தை பகுதியில் நடைபயணமாக சென்று திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நடைபயிற்சியின்போது பொதுமக்கள், வியாபாரிகளுடன் ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இன்றிலிருந்து மூன்று நாட்கள் வேலூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார் ஸ்டாலின். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் வாக்கு சேகரிக்கின்றனர்.