இந்தி திணிப்பை எதிர்த்து 20-ஆம் தேதி திமுக நடத்தவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “ செப்டம்பர் 20-ல் ஏன் போராட்டம் நடத்தவுள்ளீர்கள் என ஆளுநர் கேட்டறிந்தார். நான் மத்திய அரசின் பிரதிநிதி. அதனால் மத்திய அரசு ஹிந்தியை எந்தநிலையிலும் திணிக்காது என ஆளுநர் உறுதியளித்துள்ளதாக” கூறினார். இதனையடுத்து செப்டம்பர் 20-ல் திமுக நடத்தவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், எந்த நிலையிலும் இந்தி திணிக்கப்பட்டால் அதனை திமுக எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.