தமிழ்நாடு

தொட்டியம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த திமுக கவுன்சிலர்

Sinekadhara

தலைமையின் கோரிக்கையை ஏற்று தொட்டியம் பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவியை திமுக கவுன்சிலர் ராஜினாமா செய்தார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சியின் துணைத்தலைவர் பதவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 10- வார்டில் போட்டியிட்ட ரா. கலைச்செல்விக்கு ஒதுக்கப்பட்டது. துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கலந்து கொள்ளாததால், பேரூராட்சியின் 6-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ். எஸ். ராஜேஸ் துணைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் தி.மு.க.தலைமை கூட்டணி கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தியத்தின் காரணமாக ராஜேஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் தொட்டியம் பேரூராட்சி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.