தமிழ்நாடு

கண்ணாடி பேழையில் கருணாநிதி உடல்

rajakannan

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி கருணாநிதி உயிரிழந்தார். கருணாநிதி மறைவு குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். எவ்வளவு தீவிர சிகிச்சை அளித்தும் கருணாநிதியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு திமுக தொண்டர்கள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். 

இந்நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கருணாநிதியின் உடலை மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு வந்த போது திமுக தொண்டர்கள் தலைவா.. தலைவா என்று கண்ணீர் மல்க முழக்கமிட்டனர். தொண்டர்கள் படைசூழ கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடல் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உடலை வைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.