தமிழ்நாடு

முதல்வர் வருகைக்கு ஏற்பாடு: கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி பலி

Sinekadhara

முதல்வர் பழனிசாமி வருகையையொட்டி கொடிக்கம்பம் நடும்போது மின்வயர் பட்டு மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி உயிரிழந்தார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டியில் முதல்வர் வருகையையொட்டி நாவலூரை சேர்ந்த ராஜாமணி என்பவர் மூலம் அதிமுக கொடி கம்பம் அமைப்பதற்காக கான்ட்ராக்ட் வேலைக்கு தேமுதிகவை சேர்ந்த தியாகராஜன் (33) என்பவரை நியமித்துள்ளனர். தியாகராஜன் உத்தண்டியில் அதிமுக கொடிக்கம்பம் நடும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பின்னர் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கானத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.