தமிழ்நாடு

தீபாவளி சிறப்புப் பேருந்து முன்பதிவு இன்று தொடக்கம்

webteam


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு சென்னையில் தொடங்கியது.

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்வதற்கான சிறப்பு கவுன்டர்களை போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை கோயம்பேட்டில் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்கென சென்னையில் 29 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார். வரும் 15,16,17ஆம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கனரக வாகனங்கள் மதியம் 2மணி முதல் இரவு 2மணிக்கு நகருக்குள் வர அனுமதியில்லை என தெரிவித்தார். நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசுப்பேருந்துகள் செல்வதற்காக  தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.