தமிழ்நாடு

சசிகலாவை விமர்சிப்பவர்கள் வேண்டாம்: ஜெய் ஆனந்த்

webteam

சசிகலாவை விமர்சிப்பவர்கள் தமக்கு நண்பர்களாக இருக்க வேண்டாம் என திவாகரனின் மகனான ஜெய் ஆனந்த் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சசிகலாவின் சகோதரரான திவாகரன், சகோதரி மகன் தினகரன் இடையே மோதல் முற்றியது. இதனை அடுத்து‌ தினகரனை கடுமையாக விமர்சித்த திவாகரன், அதிமுக அம்மா அணியை நடத்தப்போவதாக அறிவித்தார். திவாகரனின் மகனான ஜெய் ஆனந்தும் செய்தியாளர்களை சந்தித்து தினகரனின் செயல்பாடுகளை விமர்சித்தார். இந்த சூழலில் தன்னுடைய பெயரையோ , புகைப்படத்தையோ திவாகரன் பயன்படுத்த கூடாது என சசிகலா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த பரபரப்பு குறைவதற்குள், திவாகரனின் மகனான ஜெய் ஆனந்த், சசிகலாவை விமர்சிப்பவர்களை தமது முகநூலில் நட்பு வட்டாரத்திலிருந்து விலகுமாறு பதிவிட்டுள்ளார்.