தமிழ்நாடு

பெறப்படாத கொரோனா கால சிறப்பு தொகுப்புகள்: ஆதரவற்றோருக்கு வழங்கிய கள்ளக்குறிச்சி ஆட்சியர்

நிவேதா ஜெகராஜா
குடும்பத்தாரர்களால் பெறப்படாத தமிழக அரசின் கொரோனா கால சிறப்பு தொகுப்பினை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கியுள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டைத்தாரர்களால் பெற்றுக்கொள்ளாமல் நிலுவையில் உள்ள தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய சுமார் 300 தொகுப்புகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் சென்று வழங்கியுள்ளார்.
குடும்ப அட்டைத்தாரர்களால் பெற்றுக்கொள்ளப்படாத பொங்கல் சிறப்பு தொகுப்பினை ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு வழங்கும் இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது