விருதுநகர்
விருதுநகர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சாலையோரம் நடப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பத்தால் விபரீதம்

PT WEB

செய்தியாளர் - T. நவநீத கணேஷ்

------

அருப்புக்கோட்டை அருகே அகரத்துப்பட்டியில் திமுக நிர்வாகியின் இல்லத் திருமணம் நடந்தது. இதற்காக அந்த பகுதியில் அமைச்சர்களை வரவேற்று திருச்சுழி சாலையில் ஏராளமான திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டு, பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் செவல்பட்டி கார்த்திகேயன் நகரைச் சேர்ந்த சண்முகவேல் என்ற விவசாயி அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திமுக கொடிக்கம்பம் அவரது முகத்திலேயே சாய்ந்து விழுந்துள்ளது.

இதில் விவசாயி சண்முகவேலின் வாய் கிழிந்து 5 பற்கள் உடைந்தன. காயமடைந்த சண்முகவேல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சண்முகவேலின் உறவினர்கள் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.