தமிழ்நாடு

அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றம்: தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

webteam

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில்‌ அரசு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றத்திற்கு ஆளாகி தீக்குளித்த தங்கராசு என்பவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

பள்ளிப்பாளையத்திலுள்ள அதிமுக பிரமுகர் கல்யாணியிடம், தன் அண்ணன் மகன் சித்தார்த்தனனுக்கு அரசு வேலை வாங்கித் தரக்கோரி தங்கராசு, 11 ‌லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சித்தார்த்தனனுக்கு அரசு வேலை கிடைக்காத நிலையில், தங்கராசு கல்யாணியிடம் பணத்தை திருப்பி கேட்டதாகக் கூறப்படுகிறது. பணம் திரும்பக் கிடைக்காததால், கல்யாணி வீட்டின் முன்பு நேற்று முன் தினம் தங்கராசு தீக்குளித்தார்.

இதையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனையில் தங்கராசு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ‌இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை தங்கராசு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், தலைமறைவாக உள்ள கல்யாணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.