தமிழ்நாடு

சமுத்திரக்கனி இலவசமாக பணியாற்றிய கொலை விளையும் நிலம்!

webteam

டெல்டா மாவட்டங்களில் நிகழும் விவசாயிகளின் தொடர் மரணங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள 'கொலை விளையும் நிலம்' எனும் ஆவணப்படத்தின்‌ வெளியீட்டு விழா சென்னை‌யில் நடந்தது. 
பத்திரிகையாளர் ராஜீவ் காந்தி இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு சமுத்திரகனி பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இயக்குநர் ராஜூ முருகன் பாடலை எழுதி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் பாடலுக்கு இசையமைத்துள்ளார். இவர்கள் அனைவரும் விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இலவசமாக இந்தப்படத்தில் பணியாற்றி உள்ளனர்  'கொலை விளையும் நிலம்' ஆவணப்படத்தின் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் லிங்குசாமி, ராஜூமுருகன், எழில், சீனு ராமசாமி உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டனர்.