இயக்குநர் பா.ரஞ்சித்  pt desk
தமிழ்நாடு

'முதல்வர் ஸ்டாலின் அவர்களே!' - தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் - பா.ரஞ்சித் அறிக்கை

இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

PT WEB

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் தலைவிரித்தாடும் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் குறித்து விளக்கமாக அந்த அறிக்கையில் பதிவிட்டுள்ளார். அதில்...

முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதி யரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தபட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? மாண்புமிகு முதல்வர ஸ்டாலின் அவர்களே!!

தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி எம்எல்ஏ, எம்பி அவர்களுக்கும் இதைவிட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி! என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.