தமிழ்நாடு

திண்டுக்கல்: நின்றிருந்த பேருந்து மீது 108 ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

kaleelrahman

வேடசந்தூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம், தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக நோயாளிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் விட்டல்நாயக்கன்பட்டி அருகே வந்தபோது சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது மோதியது.

இதில், 108 ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி பழனிச்சாமி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 108 வாகன ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் மருத்துவ உதவியாளர் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.